திங்கள், 30 டிசம்பர், 2013
செவ்வாய், 17 டிசம்பர், 2013
தொடர்ச்சி 36 முதல் 40 வரை
36. ஸ்தனபார தளன்மத்ய பட்டபந்த வளித்ரயா
ராகம் - ஸஹானா
அழகிய வடிவம் அன்னையின் உருவம்
உத்தம ஸ்த்ரீயின் உன்னத வடிவம் (அ)
வலித்ரய அங்கம் வாதனை நீக்கும்
புலியாம் காமம் பாங்காய் போக்கும் (அ)
மனமே அன்னையின் உருவில் லயிப்பாய்
தினமும் பாடி தீமையை அழிப்பாய்
ஞானத்தில் மகிழ்வே உந்தன் லட்சியம்
கானத்தில் வருவாள் கடமையை செய்தால் (அ)
பத்தும் ஐந்தும் பரத்தினை காட்டும் (அன்னையின் மந்திர அட்சரங்கள்-15)
ஸத்தின் ஸங்கம் சாஸ்த்ரம் கூட்டும்
சுத்தும் ப்ரபஞ்ச சூக்குமம் புரியும்
சித்தாம் வாலை அதனின் தொடக்கம் (அ)
37. அருணாருண கௌஸ்தும்ப வஸ்த்ரபாஸ்வத் கடீதடீ
ராகம் - முகாரி
சிவப்பு ஆடை தரித்த சிவகாம சுந்தரி
சீக்கிரம் வந்தென்னை ஆதரி (சி)
ஞானாநந்தன் எனக்கு உயிர் நீ
வானைப்போன்று ஒளிரும் தருணீ (சி)
வாக்தேவி போற்றிய பராசக்தி
போக்கிடம் வேறில்லை நீயே கதி
ஆக்கி காத்து அழிக்கும் அரசி
ஏக்கம் நீக்கி ஏற்றம் புரி (சி)
புரமெரித்தோன் துணைவி பங்கஐ லோசனி
திரிபுர சுந்தரி துன்பம் தீர்க்கும் தலைவி
அரிஸோதரி அன்னபூரணி அம்பா
துரிதமாய் எனக்கு துணைவருவாய் அம்மா (சி)
38. ரத்ன கிங்கிணிகாரம்ய ரசனா தாம பூஷிதா
ராகம் - ஆனந்தபைரவி
ரத்ன கிங்கிணி இடை அணிதான்
உத்தமமான உந்தனுக்கு அம்மா (ர)
வாலையின் உருவில் உள்ளவள் நீ
நாலாம் வேதத்தின் நற்பொருள் நீ (ர)
அருளைத்தருகின்ற ஆண்டவளே
இருளை நீக்கும் இன்னொளியே
வருவது வரட்டும் என நானும்
பொறுமையாய் இருப்பேன் நின்னருளால் (ர)
ஞானானந்த பொன் அணியை அரை
ஞாணாய் தரித்த நாயகியே
தேனாய் இனிக்கும் உன் நாமம் தேவ
சேனாபதியை பெற்றவளே (ர)
39. காமேசஞ்ஜாத ஸெளபாக்ய மார்த்வோரு த்வயான்விதா
காமேச்வரரே அறிவார் காமேச்வரியின் தத்வம்
ஸ்ரீநகரத்தில் விளங்கும் (கா)
வாக்தேவிகள் உரைப்பார் விதவித நாமங்கள்
வேதமுதல்வர் அறிவார் அதனின் தத்வங்கள் (கா)
ஞானாநந்தம் அவளின் ரூபம் உயர்
வானம் போல விளங்கம் அவள் உருவம்
சிவனாய் இருந்து சிவனை பூசிப்பார்
தவத்தினை செய்யும் தூய முனிவர்கள் (கா)
தாயவள் தத்வம் தீர்க்கம் மிக ஆனது
ஆய்ந்தறிய ஒண்ணா ஆழமிக்கது
வாயாலே அவள் நாமம் உரைத்தால்
சேயென நமக்கு சீக்கிரம் அருள்வாள் (கா)
40. மாணிக்க முகுடாகார ஜானுத்வய விராஜிதா
ராகம் பைரவி
மங்களம் அருள்வாய் ஸ்ரீமஹாத்ரிபுர ஸ_ந்தரி
மாணிக்ய முகுடம்போன்ற முழங்கால் உள்ளவள் (ம)
அழகின் பெட்டகம் அன்னையின் உருவம்
தழலின் வடிவம் தத்துவம் அருளும் (ம)
அவளின் அழகில் மனமே லயிப்பாய்
தவத்தினை செய்து தூய்மை அடைவாய்
சிவத்தின் உருவமாய் சீராய் பூஜித்தால்
பவத்தினை போக்கி ஞானாநந்தம் அருள்வாள் (ம)
அன்பே அவளுக்கு பிடித்த மந்த்ரம்
இன்முகம் அவளுக்கு ஏற்ற தந்த்ரம்
தண்மையே அவளின் தூயதாம் பீடம்
கண்ணாடி கண்டு கடவுளை அறியும் (ம)
வியாழன், 12 டிசம்பர், 2013
தொடர்ச்சி - 29 முதல் 35 வரை
29. அநாகலித சாத்ருச்ய சிபுக ஸ்ரீ விராஜிதா
அன்னை அழகுக்கு ஒப்புமை இல்லை
அன்னையின் முகவாய் அழகிதுவே (அ)
ஆயிரம் நா கொண்ட சேஷனுக்கும்
பாயிரம் பாடிட முடியாது (அ)
அற்புதமான அழகி அவள்
பொற்பாதம் பணிந்தால் பிறவியறும்
கற்கண்டைப் போன்ற இனிப்பாகும்
பற்றினை துறப்பதே ஞானனந்தம் (அ)
சங்கரர் பாடிய சக்தி அவள்
எங்கும் நிறைந்த ஈஸ்வரியாம்
அங்கும் இங்கும் அலையாமல்
பொங்கும் மனதே நினைத்திடுவாய் (அ)
30. காமேச பத்த மாங்கல்ய சூத்ரசோபித கந்தரா
ராகம் - சங்கராபரணம்
மங்கல சூத்ரம் மஹிமையுடன் விளங்கும் என கூறும் சாஸ்த்ரம்
காமேசர் தன் கையால் அணிவித்த (ம)
சக்தியை மணந்த ப்ரம்மமே ஸத்யம் பர
பக்தியால் பாடிய வாக்தேவிகள் ஸத்பாத்ரம் (ம)
மங்கலம் என்றால் சிவமாகும் உல
கெங்கும் சுடர்விடும் ப்ரகாசம்
ஸங்கத்தால் வருகின்ற ஞானாநந்தம்
தங்கிடும் விமர்சமே நல் சூத்ரம் (ம)
காமத்தை கடந்த காமேசர் அவர்
ஸாமத்தில் பாடும் சதுர்வேதர்
வாமத்தை வவ்விய காமேசீ அவள்
தாமாக தோன்றும் உயர் சைதன்யம் (ம)
31. கனகாங்கத கேயூர கமனீய புஜாந்விதா
ராகம் -மோஹனம்
கேய+ரம் தன்னை அணிந்தாள் காமேசீ
இரட்டைவினை தன்னை இதமாய் போக்கிடவே (கே)
பொன்னாலான பூஷணம் தரித்தாள் நம்
முன்னைவினை யெல்லாம் மரித்திடவே (கே)
ஞானாநந்த ஜொலிப்பு அதனுள்ளே சுழலும்
மனம் என்னும் மந்திர வளைவு உண்டு
அனைத்தும் என் கையில் அடக்கமென
வினைத்தொடர்பெல்லாம் விலக்கமென (கே)
ஸத்குருவென்ற கொல்லன் செய்தது அது
முத்துக்களான மனனம் பதித்தது
அத்துவித அறிவை அழகாய் தருவது அது
ஸத்தான சாஸ்த்திர ஸத்தியம் சொன்னது (கே)
32. ரத்னக்ரைவேய சிந்தாக லோல முக்தாபலான்விதா
ராகம் - சிந்துபைரவி
ரத்னக்ரைவேய பதக்கம் அன்னை தன் கழுத்தில்
நினைத்ததை எல்லாம் அருளும் (ர)
சாதாரணம் இல்லை சங்கடங்கள் இல்லை
ஆதாரமாய் விளங்கும் அறிவின் எல்லை (ர)
ஞானாநந்தம் அதில் விளங்கும் ரத்னம்
தன்னை அறிய வைக்கும் திருவருள் தத்வம்
சின்ன கழுத்தது சிவஞான ப்ரதம்
சன்னமாய் ஒலிக்கும் ஸதாசிவ மந்த்ரம் (ர)
வேதத்தின் உண்மை உணர்வதே சிறப்பு
நாதத்தின் ஒலியே நவரத்ன மாலை
பாதத்தை பணிந்தால் பிறகில்லை தொல்லை
ஆதரவாய் நிற்கும் அந்தகன் வருகையில் (ர)
33. காமேச்வர ப்ரேமரத்ன மணிப்ரதிபனஸ்தனீ
காமேசருக்கு தந்தாளே தேவி தன்னுடலை
தாமாக அவரின் அன்புக்கு (கா)
சிவமிங்கே அன்பின் மறுவடிவம் அதற்கு
தவமிங்கே புரிவதே குருவடிவம் (கா)
ஞானாநந்தம் நல் உடலாம் அது
தானாய் வராது தவம் வேண்டும்
வானாய் விரிவது சிவ ரூபம் அங்கு
மனதை செலுத்தினால் பரலோகம் (கா)
ஆசையை துறந்திட வேண்டுமடா மன
மாசை துடைத்திட (பரம்) தோன்றுமடா
சாவை துரத்திட வேண்டுமடா பயப்
பேயை போக்கிட பார்த்திடடா (கா)
34. நாப்யாலவால ரோமாளி லதாபல குசத்வயீ
ராகம் - செஞ்சுருட்டி
நாபியென்னும் கொடியில்
நாமரூப ஸ்தனங்கள் (நா)
அஸ்தி பாதி ப்ரிய ரோமம்
அன்னையின் உடல் ப்ரம்மம் (நா)
வானமெல்லாம் விரவியது வாக்தேவி சொன்னது
கானமிதில் உறைவது காலத்தை கடந்தது
ஞானாநந்த ரூபத்தில் ஞாலத்தில் இருப்பது
தன்னுள் உள்ளதுதான் தானாய் வாராது (நா)
தத்துவத்தை அறிந்திடவே தரணியிலே வந்தோம்
அத்துவித ப்ரம்மத்தை அறிந்திடவே வந்தோம்
ஸாத்வீகமாய் இருந்தால் ஸத்தியத்தை அறிவோம்
ஆத்ம தத்துவமே அன்னையின் உடலாகும் (நா)
35. லக்ஷ்யரோம லதாதார தாஸமுன்னேய மத்யமா
ராகம் தோடி
ஊஹித்து அறிவதைப்போல் உந்தன் இடை
உள்ளதம்மா உத்தமியே (ஊ)
குருசொல்லால் ஊஹித்து ப்ரம்மத்தை அறிவதைப்போல்
உந்தன் இடை உள்ளதம்மா (ஊ)
தன்னை அறிவது தரணியிலே கடினமாம்
அன்னை அருள்இருந்தால் அதுவும் எளிதாகும்
பின்னை பிறப்பறுக்க பராசக்தி வந்திட்டாள்
இன்னமும் ஏன்மனமே உந்தனுக்கு சஞ்சலம்? (ஊ)
ஞானாநந்தம் நம்முள் நாளும் உள்ளதுவாம்
காணாமல் போனது நம்முடை அஞ்ஞானம்
தூணாக இருப்பதுதான் குருவின் திருவருளாம்
பூண்கட்டி வைப்பதுபோல் காயத்தை காக்காதே (ஊ)
புதன், 11 டிசம்பர், 2013
தொடர்ச்சி - 24 முதல் 28 வரை
24 முதல் 28 வரை
24 நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா
பவழம் போன்ற இதழ் கொண்ட
அவளைப் பணிந்தால் அன்பு வரும்
(ப)
அன்பே அன்னையின் உதடாகும்
தன்னை அறிவதே தவமாகும்
(ப)
ருதம்பரா பண்பை அடைந்து விட்டால்
சதமாய் பிறவியும் ஆகி விடும்
பதமாய் அன்னையை போற்றிவிட்டால்
சுதந்திரம் என்பதை அடைந்திடலாம்
(ப)
ஞானம் என்பது கோவைப்பழம் அதுவே
அன்னையின் செவ்வாய் நல்ல நிறம்
பின்னைப் பிறப்பை போக்கிவிட்டால் அதுவே
தன்னைத்தான் அறியும் நல்ல விதம்
(ப)
25. சுத்தவித்யாங்குராகார த்விஜபங்க்தி
த்வயோஜ்வலா
ராகம் - சாமா
சுத்தவித்தையே அன்னையின் (இரு)பல்வரிசையே
அத்தனின் சரிபாதியே
(சு)
விதவிதமான தத்துவங்கள் உலகினிலே அதில்
சதமாக உள்ளதிங்கே சித்சக்தியே
(சு)
தன்னை அறிந்தால் பிறப்பில்லையே
ஞானாநந்தம் என்பார் அந்நிலையே
பண்டைய முனிவரின் பரம்பரையே நாம்
அண்டிட அவளன்றி ஓர் கதியில்லையே
(சு)
அருள்சக்தி நமது வழித்துணையே
இருள்தன்னை அகற்றிடும் ஒளிவெள்ளமே
இருபல் வரிசைக்கோர் இணையில்லையே
கருப்பொருள் அவள்தான் தடையில்லையே
(சு)
26. கற்பூரவீடிகாமோத ஸமாகர்ஷிகந்தரா
ராகம் - தோடி
கற்பூர வீடிகை அன்னை தன் செவ்வாயில் திகழும் (க)
மூக கவி பெற்ற அருள் நாம் மறக்க முடியுமா?
கவிகாளிதாஸன் கவித்வம் எதனால் தெரியுமா?
(க)
ஞானாநந்தம் பெறும் வல்லமை அதனாலே
கானம் பாடும் கருத்தும் அதனால் சிதறாதே
தன்னை அறிவது தாய் அவள் அருளாலே
பின்னை பிறப்பறும் அவள் வாய் சொல்லாலே
(க)
பூஜையில் நாம் வைக்கும் கர்பூர வீடிகை நம்
பிறவித் தொடரை அறுக்க அது பூர்வபீடிகை
திறவுகோல் ஞானத்திற்கு பக்திஎனும் சாவி மனத்
துறவுதான் முக்கியம் எங்கும் ஓடாது தாவி
(க)
27. நிஜஸல்லாப மாதுர்ய வினிர்பச்சித கச்சபி
உறையில் இட்டு மூடினாள் ஸரஸ்வதி தன் வீணையை
(உ)
லலிதையின் குரலுக்கு ஈடு இணை இல்லையென
லஜ்ஜையினால் தன் வீணையை
(உ)
நாரதர் தன் வீணையும் நாணம் கொண்டது
ஆரணப்பொருளுக்கு ஆர்வம் கொண்டது
காரணம் அவள் என கச்சபீ நினைத்தது
ப+ரண வித்தைக்கு பூஜையை செய்தது
(உ)
ஞானாநந்தமே நானிலத்தில் சிறந்தது
ஞாலம் இங்கு ஓர்நாள் மறைவது
பாலமாம் பக்திக்கு இந்நாமம் உயர்ந்தது
தூலமாய் கண்டிட வாக்தேவி மொழிந்தது
(உ)
28. மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத்காமேச மானஸா
ராகம் - கானடா
புன்னகை செய்தாள் புவனேசி அதில்
தன்மனம் இழந்தார் காமேசர்
(பு)
மாயாவிசிஷ்ட சைதன்யம் அது
மாயையால் ஈசனை மயக்கிவிடும் (பு)
ஞானாநந்தம் அடைந்து விட்டால்
ஞாலத்தில் பற்று இற்று விடும்
காலனும் பயந்து ஓடி விடும் அவள்
காலடி தன்னை பணிந்து விட்டால் (பு)
சிவசக்தி மயமாம் உலகமிது என்னும்
சீரிய ஞானம் அடைந்திடவே
சித்சக்தி இரண்டாய் வந்து நம்மை
புத்தியால் சிறக்க செய்ததுவே (பு)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)